திருச்சி திருச்சி கே.கே. நகரை சேர்ந்தவர் மரிய அசோக்குமார் (33). இவர் கடந்த 14ம் தேதி மாலை தெப்பக்குளம் தபால் நிலையம் பகுதியில் டூ வீலரை நிறுத்தி விட்டு கடைவீதிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கோட்ைட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெட்டியாபட்டியை சேர்ந்த வடிவேல்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இருசக்கர வாகனம் திருடியவர் கைது appeared first on Dinakaran.